ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வடஇந்தியாவுக்கு லதா மங்கேஷ்கர் என்றால் தென்னிந்தியாவுக்கு பி.சுசீலா. இசைகுயில் என்றும், மெல்லிசை அரசி என்றும் போற்றப்படுகிறவர். இந்திய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர். 5 தேசிய விருதுகளையும், 12 மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். ஏற்கெனவே அவருக்கு பல பல்கலை கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
இந்த நிலையில் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசிர் பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.