ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இயக்குனர், நடிகர் ஜிஎம் குமார் தன் முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1986ல் பிரபு, ராம்குமார், பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அறுவடை நாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். பின்னர், “பிக் பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம்” ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். 2006ல் வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமாக ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜிஎம் குமார் நேற்று பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,“எனது எக்ஸ்-ஐப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றேன். மெட்ராஸ், பெங்களூரூ, கோவா, பாம்பே, மெட்ராஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.
“கடந்த 30 வருடங்களாக பாம்பேக்கு டிரைவிங் செய்தே போய் வருகிறேன். நான் அவளுடன் டிரைவிங் போவேன், ஆனால், இப்போது விதி மாறிவிட்டது. அவளைப் பார்க்கத் தனியாகச் சென்றேன்,” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன் முதல் பட கதாநாயகியாக நடிகை பல்லவியைக் காதலித்து மணந்து கொண்டவர் ஜிஎம் குமார்.