திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இயக்குனர், நடிகர் ஜிஎம் குமார் தன் முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1986ல் பிரபு, ராம்குமார், பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அறுவடை நாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். பின்னர், “பிக் பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம்” ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். 2006ல் வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமாக ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜிஎம் குமார் நேற்று பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,“எனது எக்ஸ்-ஐப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றேன். மெட்ராஸ், பெங்களூரூ, கோவா, பாம்பே, மெட்ராஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.
“கடந்த 30 வருடங்களாக பாம்பேக்கு டிரைவிங் செய்தே போய் வருகிறேன். நான் அவளுடன் டிரைவிங் போவேன், ஆனால், இப்போது விதி மாறிவிட்டது. அவளைப் பார்க்கத் தனியாகச் சென்றேன்,” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன் முதல் பட கதாநாயகியாக நடிகை பல்லவியைக் காதலித்து மணந்து கொண்டவர் ஜிஎம் குமார்.