நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல நடிகரான பிர்லா போஸ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சென்னையில் அப்பார்ட்மென்ட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகனை கும்பல் ஒன்று கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போலீஸ் புகாராக மாறியுள்ள நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிர்லா போஸின் காரை அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிர்லா போஸுக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிர்லா போஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார். எனவே, பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து 10 பேருடன் சேர்ந்து அவரது மகனை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி மீண்டும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். பிர்லா போஸ் போலீஸாரிடம் அளித்துள்ள புகாரின் பேரில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.