சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
நகுல் நடிப்பில் ‛வாஸ்கோடகாமா' என்ற படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படம் 'தி டார்க் ஹெவன்'. ரேணு சவுந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். பாலாஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார். இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. புலனாய்வு செய்யும் இன்ஸ்பெக்டராக நகுல் நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது என்றார்.