உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இப்படத்திற்கு, ‛மகாராஜா' என்று டைட்டில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராஜமவுலி. அதோடு, ‛‛மகேஷ் பாபுவை வைத்து நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை,'' என்றும் அவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.