மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தொடர்ந்து தாங்கள் மட்டும் இன்றி தங்களது மகன்களின் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்திருக்கிறார் நயன்தாரா.
அது மட்டுமின்றி, ‛இது எனக்கு கிடைத்தது என்று அவளது கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என்ற ஒரு பதிவையும் போட்டுள்ளார் நயன்தாரா. அவரது புகைப்படத்துடன் கூடிய இந்த வாசகமும் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒருவேளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விட்டார்களோ, அதனால்தான் அவரை அன்பாலோ செய்துள்ளாரோ நயன்தாரா என்று நெட்டிசன்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் விக்னேஷ்சிவனை மீண்டும் பாலோ செய்தார் நயன்தாரா. மேலும், அவரது பதிவு, தற்செயலானதா அல்லது தங்களது படத்திற்கான விளம்பர யுக்தியா எனத் தெரியவில்லை.