சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் |
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தொடர்ந்து தாங்கள் மட்டும் இன்றி தங்களது மகன்களின் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்திருக்கிறார் நயன்தாரா.
அது மட்டுமின்றி, ‛இது எனக்கு கிடைத்தது என்று அவளது கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என்ற ஒரு பதிவையும் போட்டுள்ளார் நயன்தாரா. அவரது புகைப்படத்துடன் கூடிய இந்த வாசகமும் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒருவேளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விட்டார்களோ, அதனால்தான் அவரை அன்பாலோ செய்துள்ளாரோ நயன்தாரா என்று நெட்டிசன்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் விக்னேஷ்சிவனை மீண்டும் பாலோ செய்தார் நயன்தாரா. மேலும், அவரது பதிவு, தற்செயலானதா அல்லது தங்களது படத்திற்கான விளம்பர யுக்தியா எனத் தெரியவில்லை.