ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், ‛‛பெர்லினாலேயில் எங்கள் கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி. மேலும், நம்ப முடியாத சில பதில் எங்கள் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை பதித்துள்ளது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.