ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் பாலா.