ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு 'உத்தரவு மகாராஜா' படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள 'சத்தமின்றி முத்தம் தா' படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்தை கார்த்திகேயன் தயாரித்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ராஜ்தேவ் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
படத்தில் நடித்திருப்பது குறித்து பிரியங்கா திம்மேஷ் கூறும்போது, "சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். இதற்காக நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன், சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது" என்றார்.