நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை பா. இரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இதற்கிடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக துருவ் விக்ரம் பல மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 15ம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகின்றனர். இதன் படப்பிடிப்பு 70 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.