திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ஆதித்யா சாகஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள பாலிவுட் படம் 'ஆர்டிக்கிள் 370'. அருண் கோவில், கிரன் கர்மாகர், ஸ்கந்த் தாக்கூர் உள்பட பலர் நடித்துள்ளனர். பி62 ஸ்டூடியோ தயாரித்துள்ள படத்தை ஜியோ ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. படம் கடந்த 23ம் தேதி வெளிவந்தது.
இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசுகிறது. சுமார் 20 கோடியில் தயரான இந்த படம் 50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி காஷ்மீர் மாநில பாதுகாப்பு செயலாளர் ராஜேஸ்வரி சாமிநாதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார், யாமி கவுதம் தேசிய பாதுகாப்பு படை ஏஜெண்டாக நடித்துள்ளார்.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று அரேபிய நாடுகள் தங்கள் நாட்டில் படத்தை திரையிட தடை விதித்திருக்கிறது. இப்படம் வெளியாகும் முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள இப்படம் உதவும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.