திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இந்திய சுதந்திர போராட்ட வீரர் சாவர்கரின் வாழ்க்கை வரலாறு 'சுவாதந்திரியா வீர் சாவர்கர்' என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகி வருகிறது. இதனை ரன்தீப் ஹூடா இயக்கி, நடிக்கிறார். ரன்தீப் இதற்குமுன் ஹைவே, சரப்ஜித், சுல்தான் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். வருகிற மார்ச் 22ம் தேதி படம் வெளிவருகிறது.
சாவர்கர் வாழ்க்கையை படமாக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆய்வு செய்திருக்கிறார் ரன்தீப். இதன் ஒரு பகுதியாக வீர் சாவர்கர் அந்தமானில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு நாள் தங்கி அதன் வலியை அனுபவிக்க திட்டமிட்டவர். 20 நிமிடங்கள் கூட அதற்குள் அமர்ந்திருக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது : ‛‛பாரத மாதாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவர் வீர் சாவர்கர். தலைவர், பயமறியா சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் தொலைநோக்கு சிந்தனையாளர். உயர்ந்த அறிவாற்றல் மற்றும் தனது தைரியத்தால் அந்த மனிதர் பிரிட்டிஷாரை அச்சமூட்டியதால், காலாபானி (அந்தமான்) சிறையில் அவரது வாழ்நாளில் இரண்டு முறை 7க்கு 11 அடி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை அறிந்துகொள்ள அவர் அடைக்கப்பட்ட சிறையில் என்னை நானே அடைத்துக் கொள்ள முயற்சித்தேன். 11 ஆண்டுகள் அவர் அடைப்பட்டுக் கிடந்த தனிமைச் சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை. சிறையில் கொடுமைகளையும், மனிதாபிமானமற்ற சூழலையும் எதிர்கொண்ட வீர் சாவர்க்கரின் இணையற்ற சகிப்புத் தன்மையை கற்பனை செய்து பார்க்கிறேன். அவரது விடாமுயற்சியும், பங்களிப்பும் ஈடு இணையற்றது'' என்று எழுதியுள்ளார்.