திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பிரபல செய்தி டிவி நிறுவனம் ஒன்று 'வாட் இந்தியா தின்க்ஸ் டுடே' என்ற மாநாடு நிகழ்ச்சி ஒன்றை டில்லியில் மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. அதில், 'பெண் கதாநாயகிகள் - த நியூ ஹீரோ' என்ற விவாதத்தில் கலந்து கொண்டு நடிகையும், அரசியல்வாதியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'அனிமல்' படம் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“அனிமல்' படத்தை நான் பார்க்கவில்லை. காரணம், அது எனக்கான படம் அல்ல. 'அனிமல்' போன்ற ஒரு படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்யும் ஒரு படமாகத் தொடர்கிறது என்றால், இது போன்ற படங்களைப் பார்க்கும் மக்களின் மனநிலையைப் பற்றி உண்மையில் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கு முன்பே 'கபீர் சிங்' படத்துடன் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்னை இருந்தது. நான் இயக்குனரை குறை கூறவில்லை. அவருக்கு இது வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
இந்த மன்றத்தில் பாலின சமத்துவம் பற்றி பேசுவது, பெண்களுக்கு சமமான மரியாதைப் பற்றிப் பேசுவது, அவர்களுடைய கண்ணியம் பற்றிப் பேசுவது, அவர்கள் எப்படி முன்னிறுத்தப்பட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறோம். ஆனால், நீங்கள் இன்னும் 'அனிமல்' போன்ற ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள். இது போன்ற படங்களைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் அனைவரும் இளம் வயதினர். அவர்கள் படித்த இளவயதினர். “ஓ… நாங்கள் படத்தை நேசிக்கிறோம்” என்கிறார்கள். ஆனால், நான், “உங்கள் மனதில் என்ன இருக்கிறது,” எனக் கேட்கிறேன்.
எனது மகள்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பார்த்தார்கள். பார்த்துவிட்டு வந்து, “அம்மா, இந்தப் படத்தைப் பார்க்காதே,” என்றார்கள். அவர்கள் பார்த்தது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது. அவர்களது யோசிக்கும் எண்ணம் மாற வேண்டும்,” என்று பேசியுள்ளார்.
'அனிமல்' படம் உலகம் முழுவதும் 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்தைப் பற்றி நடிகை ராதிகாவும் ஏற்கெனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.