மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை தேடி வரும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்காக வைத்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சென்னை வந்து அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு அதில் ஒரு ரசிகர் இறந்து விட்டார். இதன் காரணமாக தற்போது ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை சென்னையில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி போட்டோசூட் நடத்தினேன். அப்போது திரும்பிச் செல்லும்போது ஒரு ரசிகர் விபத்தில் இறந்துவிட்டது எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்தது. அதனால் இனிமேல் எனக்காக ரசிகர்கள் பயணம் செய்யக்கூடாது என்ற முடிவை எடுத்து உள்ளேன். நாளை(இன்று) முதல் ரசிகர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். அதன் முதல் கட்டமாக விழுப்புரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள செல்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.