ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள படம் ‛திரு.மாணிக்கம்'. நாயகியாக அனன்யா நடிக்க, முக்கிய வேடங்களில் பாரதிராஜா, நாசர் ஆகியோர் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரனும் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட படங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்... வட்டார மொழியோடு... தங்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.