ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
2022ம் ஆண்டு தன்னுடைய சிநேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். தன் மீது சினேகன் அவதூறு செய்தியை பரப்புவதாக அவர் மீது நடிகை ஜெயலட்சுமியும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இருவருமே நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள திருமங்கலம் போலீசார், அண்ணா நகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியவர்கள், அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ஜெயலட்சுமி. தான் வெளியே வந்ததும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார் . அதில், நீதி வெல்லும். வருங்காலம் பதில் சொல்லும். எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.