ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
2022ம் ஆண்டு தன்னுடைய சிநேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். தன் மீது சினேகன் அவதூறு செய்தியை பரப்புவதாக அவர் மீது நடிகை ஜெயலட்சுமியும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இருவருமே நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள திருமங்கலம் போலீசார், அண்ணா நகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியவர்கள், அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ஜெயலட்சுமி. தான் வெளியே வந்ததும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார் . அதில், நீதி வெல்லும். வருங்காலம் பதில் சொல்லும். எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.