நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் என்றஇசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அடிப்படையில் இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது தயாரிப்பின் மூலம் புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
தற்போது பரத் தனசேகர் ரோமியோ படத்தில் இடம் பெறும் செல்லக்கிளியே... என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். ஆதித்யா பாடி உள்ளார்.
இது குறித்து தனசேகர் கூறியதாவது: இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த டியூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை 'செல்லக்கிள்ளி' பாடலுக்கு உயர் தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்.