நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'அக்கரன்'. இந்த படத்தில் அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர். இவர்கள் தவிர 'கபாலி' விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார். அருண் கே.பிரசாத் இயக்கியுள்ளார்.
படம் குறித்து அவர் கூறும்போது "அக்கரன் என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள் என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா, பிரியதர்ஷனி ஆகியோரில் ஒருவர் படிக்கிறார். இன்னொருவர் வீட்டில் இருக்கிறார்.
அவரது மகள்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
உடல் பலத்தால் அவர்களை எதிர்க்க முடியாத எம்.எஸ்.பாஸ்கர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. பழிவாங்கிய பிறகு அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதும் படத்தில் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது" என்றார்.