நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் டிராப் செய்யப்பட்டதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.