ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.
அதில், “காலைல இருந்து உங்க வாழ்த்துகளையெல்லாம் பார்த்துட்டிருக்கேன். ரொம்ப நன்றி, பொறந்தநாளன்னைக்கு வேலை செய்ய கொடுத்து வச்சிருக்கணும். அதுக்கு உங்க அன்புதான் காரணம். போன வருஷம் இதே நாள், இதே நேரம் ஒரு கனவு புராஜக்ட்டை ஆரம்பிச்சோம். தற்செயலா என்னன்னு தெரியல. இந்த வருஷம் அதே நாள், அதே நேரத்துல அதே புராஜக்ட்டை முடிக்கிறோம். கூடிய சீக்கிரம் இதைப் பத்தின விஷயங்கள உங்ககிட்ட சொல்லிட்டே வரப்போறோம். எப்படி, ஆரம்பத்துல இன்டின்டன்ட்டா எப்படி பசங்கலாம் சேர்ந்து பண்ணமோ, அதே மாதிரி பசங்களோட சேர்ந்து ஒரு அளவுக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். நன்றி, தொடர்ந்து ஆதரவு கொடுங்க, உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி,” எனப் பேசியுள்ளார்.
ஹிப்ஹாப் தமிழா நடித்து கடைசியாக கடந்த ஆண்டு 'வீரன்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வந்து ஒரு வருடமாகிவிட்டது. அப்படத்தின் நிலை என்னவென்பது தெரியவில்லை.