நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. தேனி, பண்ணைபுரத்தை அடுத்துள்ள லோயேர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் இளையராஜா சென்னை திரும்பினார். ஆனாலும், வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அவரது இசைப் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் இளையராஜா.
பிரபல கர்நாடக இசைப் பாடகரான சஞ்சய் சுப்பிரமணியம் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'அது நடந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசையில் பிரபல பாடகராக இருக்கும் சஞ்சய், சினிமாவில் இளையராஜா இசையில் பாடியிருப்பதைத்தான் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. அது சினிமா பாடலா அல்லது பக்திப் பாடலா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும் இளையராஜா இசையில் சஞ்சய் சுப்பிரமணியம் பாடுவது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.