நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பெங்களூரு: 'இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என நடிகர் யஷ் கூறியிருப்பது, எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷ் சுயேட்சையாக களமிறங்கினார். ஸ்டார் நடிகர்கள் தர்ஷன், யஷ் உட்பட பலர் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும் வாய்ப்புள்ளது. தொகுதியில் தானே களமிறங்குவதாக சுமலதா பிடிவாதமாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதியை விட்டுத்தரும்படி கோரியுள்ளார்.
இன்னும் மாண்டியா தொகுதி இழுபறியில் உள்ளது. இம்முறை பா.ஜ., சார்பிலோ அல்லது சுயேச்சையாக சுமலதா போட்டியிட்டால், நடிகர்கள் பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக நடிகர் யஷ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.
இதனால், சுமலதா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.