நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமா நடிகையான குயிலி சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்திருந்தார். அந்த தொடருக்கு பின் குயிலி சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை சீரியலில் நடிகையாக இல்லாமல் புதியதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு 'வாழ்ந்து காட்டுவோம்' என பெயர் வைத்துள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' பாணியில் தயாராகி வரும் இந்நிகழ்ச்சியில் பிரச்னைகளுக்கு தீர்வளிக்க அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.