ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் இளஞ்செழியன், ஜியோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோடீஸ்வரர் ராஜு இணைந்து தயாரிக்கும் படம் 'தங்க முட்டை'. தெலுங்கில் பங்காரு குட்டு என்றும் இரு மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இந்தப் படத்தை கோபிநாத் நாராயணமூர்த்தி எழுதி, இயக்கி உள்ளார். இயக்குனர் மிலிந்த்ராவ் மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணண், பிஜோய் நம்பியாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் சம்பூர்ணேஷ் பாபுவுடன் ரோபோ சங்கர், சுரபி சுக்லா, மொட்ட ராஜேந்திரன், சரண்ராஜ், துவாசி மோகன், சுரேகா வாணி, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு, ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதாநாயகி கிரண் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீர் டாண்டன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "இந்த படத்தில் சம்பூர்ணேஷ் பாபு காமெடி திருடனாக நடித்துள்ளார். அவருக்கு ஒரு தங்க முட்டை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது தான் படத்தின் கதை. அந்த தங்க முட்டை என்ன என்பது சஸ்பென்ஸ். சீரியஸான காட்சிகளும் நல்ல மெசேஜும் படத்தில் உள்ளது. தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தனித்தனியாக உருவாகியுள்ள இந்த படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது.