'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் | அமெரிக்க திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம் | மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர் |
இயக்குனர் கே.பாக்யராஜ் தனது 'எக்ஸ்' தளத்தில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானது அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி குளிப்பவர்களை சில மர்ம நபர்கள் நீருக்குள் இழுத்து கொடூரமாக கொலை செய்வதாகவும், பின்னர் அவர்களின் உடல்களை தேடுவதற்காக பணம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கே பாக்யராஜ் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பாக்யராஜின் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என தமிழ்நாடு உண்மை கண்டறிதல் அறிக்கை குழு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இதுவரை பவானி ஆற்றுப்பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. கடந்த 2022ம் ஆண்டு பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்ததனர், அதன்பின் 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான 'மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை ' கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2023ல் 6 ஆக குறைந்தது. 2024ல் தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை. வதந்திகளை பரப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.