ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா 2 : தி ரைஸ் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இடம் பெற்ற சாமி சாமி பாடலும் ஊ அண்டாவா(ஊ சொல்றியா...) என்கிற பாடலும் சென்சேஷனல் ஹிட் ஆகின.
இதில் சாமி சாமி பாடலுக்கு படத்தின் நாயகி ராஷ்மிகாவே நடனமாடியிருந்தார். ஊ அண்டாவா பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார். இந்த இரண்டு பாடல்களுமே ராஷ்மிகா மற்றும் சமந்தாவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தன. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் இதேபோன்று ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக பாலிவுட் நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவைப் போல திஷா பதானியும் இந்த ஐட்டம் பாடல் மூலமாக அதிகம் பிரபலமாவார் என எதிர்பார்க்கலாம்.