திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி. இவர் பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். சினேகா, நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர். தற்போது சேவியர் பிரிட்டோ தன் மருமகனை சினிமாவில் அறிமுகப்படுத்த படம் தயாரிக்கிறார். இந்த படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இவர் இயக்கிய பாலிவுட் படமான 'ஷெர்சா' அங்கு வெற்றி பெற்றது அடுத்து சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
அதற்கு இடையில் இந்த படத்தை இயக்கி வருகிறார். ரொமாண்டிக் த்ரில்லர் வகையிலான படத்தில் ஆகாஷ் முரளி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.