குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |
தமிழில் பாபா, மிலிட்டரி, பாலா உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் ருத்ரவீணை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் சந்தோஷி. திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு மேக்கப், பேஷன் போன்ற பிசினஸ்களில் பிசியாகிவிட்டார். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று மேக்கப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் சந்தோஷி, அண்மையில் இலங்கையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். இலங்கை பயிற்சி வகுப்பின் போது பரிமாறப்பட்ட உணவுகளில் அசைவ உணவு மட்டுமே இருந்ததாகவும், சைவம் சாப்பிடும் சந்தோஷிக்கு வேறு உணவை ஏற்பாடு செய்யாமல் வெறும் ஜூஸை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கியதாகவும் சந்தோஷி கூறியுள்ளார். மேலும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் முறைப்படி சாப்பாடு வழங்கமால் சாப்பாடு பொட்டலங்களை வழங்கியதாகவும் அதையும் மிக தாமதமாகவே ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதை அந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்திருந்த சந்தோஷி தனது நிகழ்ச்சியில் இப்படி நடந்தது தனக்கு மிகவும் அசிங்கமாகவும் வேதனையாகவும் இருப்பதாக கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.