ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் 'கொட்டுக்காளி' என்கிற படத்தை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக உருவாக்கினர் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை முதல் முறையாக திரையிடுவதாக அறிவித்துள்ளனர்.