மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் அவ்வப்போது தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் இயக்குனர் பா. ரஞ்சித், தற்போது ஜே.பேபி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்கி உள்ளார். தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ‛யு' சான்றிதழ் கொடுத்திருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பா.ரஞ்சித்.
அதோடு ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த படத்திற்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் கிளீன் யு சான்றிதழ் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பா.ரஞ்சித்.