மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகரான ஜெகதீஷ் பண்டாரி என்பவர் துணை நடிகை ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும், ஜெகதீஷ் காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தாலும் தற்போது அதை ஈடு செய்யும் விதமாக புஷ்பா 2 படக்குழுவினர் இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.