ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் படம், “தண்டல்”. இந்த படம் ஆந்திர மாநிலத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இதில் நாக சைதன்யா மீனவர்கள் தலைவராகவும், சாய் பல்லவி மீனவ பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. இதற்காக நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் அந்த கிராமத்தில் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து தோல்வியை சந்தித்து வந்த நாக சைதன்யா தனக்கு ஒரு திருப்பம் தரும் படம் வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுத்து கடுமையான பயிற்சி எடுத்து நடித்துள்ளார். சாய் பல்லவியும் மீனவ பெண்ணாக நடிக்க பயிற்சி எடுத்தார். சாய் பல்லவிக்கு தெலுங்கு பேசத் தெரியும் என்றாலும் கடற்கரையோர மீனவ பெண்களின் தெலுங்கு ஸ்லாங் கற்று நடித்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜூன் வெளியிடுகிறார்.