நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஜய் தான் அரசியலில் நுழைவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு திரை உலகில் இருந்து எதிர்பார்த்த பல நபர்களிடமிருந்து எந்த விதமான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ரியாக்சன் என எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவது துவங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் மேடையில் நின்று தனது ஆட்கள் மூலமாக வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் பத்தாது களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை முன் வைத்தார்.
அதன்பிறகு பேசிய இயக்குனர் பேரரசு, விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார். குறிப்பாக ‛‛இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் எப்போதும் விஜய்யின் விசுவாசி தான்'' என பொது மேடையிலேயே ஓப்பனாக பேசினார் பேரரசு.
இத்தனைக்கும் அவர் பா.ஜ., கட்சியில் பொறுப்பில் இருந்தாலும் தன்னை திரையுலகில் ‛திருப்பாச்சி' படம் மூலம் அறிமுகப்படுத்தி மீண்டும் ‛சிவகாசி' என்கிற இன்னொரு பட வாய்ப்பையும் தனக்கு கொடுத்ததற்காக நன்றி உணர்வுடன் தனது விசுவாசத்தை பேரரசு வெளிப்படுத்தியுள்ளார் என்றே தெரிகிறது.