மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. விளம்பர பரபரப்புக்காக அவ்வப்போது எதையாவது செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தது எல்லை மீறி தற்போது அவரை சிக்கலில் மாட்டி உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பில் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி இறப்பு நாடகம் ஆடினார். விழிப்புணர்வுக்காகவே இப்படி செய்தேன் என்றார்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கோல்கட்டாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.