துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. விளம்பர பரபரப்புக்காக அவ்வப்போது எதையாவது செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தது எல்லை மீறி தற்போது அவரை சிக்கலில் மாட்டி உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பில் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி இறப்பு நாடகம் ஆடினார். விழிப்புணர்வுக்காகவே இப்படி செய்தேன் என்றார்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கோல்கட்டாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.