உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா. சூப்பர் மாடல் போட்டியில் பட்டம் பெற்றதன் மூலம் கவனிக்கப்பட்டார். 'பிக் பாஸ் சீசன் -6'ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். சமுத்திரகனி, தம்பி ராமையா நடித்த 'வினோதய சித்தம்' படத்தில் நடித்திருந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஷெரினாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினாவுக்கு போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதும் போனில் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.