ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். இதில் தியா அம்மா, அப்பாவைப் போன்று மருத்துவராக மருத்துவம் படித்து வருகிறார்.
தியாவுக்கு தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. திலன் என்பவரைத் திருமணம் செய்யப் போகிறார் தியா. கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் வெளிநாட்டில் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரன் கோகுலுடன் திரைப்பட முன்னணியினருக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். முதல் அழைப்பாக தனது நண்பரும், சக நடிகருமான ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.