22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சக்திகள் இருப்பதாகவும் திராவிட அரசியல் பேசுவோர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுகுறித்து பதிலளித்துள்ள பாலா, 'நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக விமர்சனம் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமாம் இருக்கிறார்கள். என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் எனக்கு பின்னால் இருப்பதால் தான் நான் இந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.