500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் மன்சூரலிகான் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து நேரில் ஆஜரான அவர், தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அப்படி கூறியவர் அதையடுத்து த்ரிஷா மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது தவறு என்றும், இதற்கு மானநஷ்ட வழக்கு தொடர முடியாது என்று கூறியதோடு, விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார். அதையடுத்து தான் நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி ஒரு லட்சம் ரூபாயை கட்டுவதற்கு 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் மன்சூர் அலிகான்.
அவருக்கு நீதிபதி அவகாசம் அளித்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் மன்சூர் அலிகான். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அபராத பணம் ஒரு லட்சத்தை கட்டுவதாக தனி நீதிபதியிடம் ஒப்புக்கொண்டு கால அவகாசமும் கேட்ட நிலையில், அந்த தீர்ப்பை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியதோடு, அதே நீதிபதியிடம் உத்தரவை திரும்ப பெற கோரிக்கை வைக்கலாம். அல்லது பணம் கட்ட முடியும், முடியாது என்பதை அவரிடத்தில் தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டு மன்சூர் அலிகானுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.