ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி கொண்டிருக்கின்றன. ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது. இதன் மூலம் யாரையும் மோசமாக காட்டலாம் என்ற நிலைமை அச்சத்தை தருகிறது. இதுபோன்ற வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி என்றால் அதை பகிர்ந்து சந்தோஷப்படுபவன் அவனை விட பெரிய குற்றவாளி. இவர்களுக்கு பிரபஞ்சம் தண்டனை கொடுக்கும். நான் தைரியசாலி. எனது வலிமையை தகர்க்க முடியாது. பெண்களின் நிர்வாண வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என புரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அபிராமி வெங்கடாசலம் பிரபலமானவர். நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.