ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும்.
80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அவர்களுக்கான பெரிய வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்தான் பாண்டியராஜன் என்பது சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
தற்போது இருவரது வாரிசுகளும் ஒரே படத்தில் பெயரையும், வரவேற்பையும் பெற்றுவிட்டார்கள். 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்த சாந்தனு, பிரித்வி இருவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இருவருக்குமே இப்படம் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இந்த வரவேற்பை வரும் காலங்களில் அவர்கள் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். மகன்களின் வெற்றி அவர்களது அப்பாக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்,” என திருக்குறளைப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் பிரித்வி.
“எனது அப்பா, எனது முதல் ஹீரோ. மக்களே… எனது அப்பாவை அவரது இதயத்தின் அடியிலிருந்து மகிழ வைத்ததற்கு நன்றி. 'ப்ளூ ஸ்டார்' படத்திற்கான உங்கள் வரவேற்பும், ஆதரவும்தான் இதை நிகழ்த்தியது, எப்போதுமே நன்றியுடன்,” என சாந்தனு பதிவிட்டுள்ளார்.