அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் தமிழில் 'பாகுபலி 1, புலி, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. இந்த ஈடு இணையற்ற பரிசுக்குக் கடவுளுக்கு நன்றி. இந்த பயணத்திற்காக எனது பெற்றோர், குடும்பம், மதிப்புமிக்க டெக்னீஷியன்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எனது சக நடிகர்கள், மீடியா, என்டர்டெயின்மென்ட் சேனல்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், வகுதா-வின் மொத்த குடும்பம், மற்றும் ஒவ்வொருவருக்கும் எனது பெரிய நன்றி.
எனது வாழ்க்கையில் நான் சம்பாதித்த, என் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் ரசிகர்களாகிய எனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பெரிய அணைப்பும், அதிகமான அன்பும். இது ஒரு ஏற்ற இறக்கமான வாழ்க்கை, இருப்பினும் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறேன்.
நான் குறையற்றவன் அல்ல, நான் சரியானவன் அல்ல, என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வாய்ப்புகள் வரும் போது என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னை அப்படியே ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சில வருடங்களுக்கு முன்பு நடந்தது போலத் தெரிகிறது. 'பிரம்மா' படத்திற்காக கண்டீரவா ஸ்டுடியோவில் அம்பரிஷ் மாமாவுடன் நுழைந்து, கேமராவுக்கு முன் நின்றது, சில வருடங்களுக்கு முன்பு நடந்தது போலத் தெரிகிறது. ஆனால், 28 வருடங்களாகிவிட்டது. பணிவாய் உணர்கிறேன். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்காக நான் ஒவ்வொருவருக்கும் அன்பும், மரியாதையும், நன்றியையும் வைத்துள்ளேன்,” என பதிவிட்டுள்ளார்.