100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
தனுஷ் நடிப்பில் ‛கேப்டன் மில்லர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, நாகார்ஜூனா ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி பகுதியில் நடக்கிறது. அந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே அறிவிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் செல்லும் பாதையில் இப்படி படப்பிடிப்பு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.