மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தனுஷ் நடிப்பில் ‛கேப்டன் மில்லர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, நாகார்ஜூனா ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி பகுதியில் நடக்கிறது. அந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே அறிவிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் செல்லும் பாதையில் இப்படி படப்பிடிப்பு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.