ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன்பிறகு பான் இந்தியா ரிலீஸ் என்கிற வார்த்தை ரொம்பவே பிரபலமானது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டை குறிவைத்து பான் இந்திய ரிலீசாக வெளியாகி வருகின்றன. அது மட்டுமல்ல பல ஹீரோக்களும், ஹீரோயின்களும் தங்களை பான் இந்திய நட்சத்திரங்களாக உருமாற்றிக் கொண்டும் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் நடிகைகள் இப்படி பான் இந்திய அங்கீகாரம் பெற்று வருவது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், “கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே அதாவது நான் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே, குறிப்பாக இந்த சோசியல் மீடியா மற்றும் ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பே தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் நுழைந்து நடித்து விட்டேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அப்போதைய பேட்டிகளை கவனித்துப் பார்த்தால் பான் இந்தியா என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். அதனால் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்” என்று கூறியுள்ளார்.