அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னால் இருக்கக் கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வரம். என்னுடைய சின்ன சின்ன வெற்றியை கூட பாராட்டி ஆனந்தப்படுவார். பெற்றோர் குழந்தையை பாராட்டுவது போல் இவர் என்னை பாராட்டுவார். மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்துகிறார். தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அளவில்லாமல் காதலிப்பது எப்படி என்று இவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் இன்று இந்த இடத்தில் இருக்க இவரே காரணம்'' என தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.