இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அலைகள் சீரியலில் தான் மிகவும் கொடூரமாக நடித்திருந்ததாகவும் அப்போது பெண்கள் பலரும் என்னை பார்க்கும் போது மண்ணை வாரி தூற்றினார்கள். அதனால் கூட தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு பின் சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகவும் குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.