ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் 75 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அயலான் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக தெரிவித்திருக்கிறார்.
'நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று ரஜினிகாந்த் கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதையடுத்து ரஜினி இடத்தில் நீங்கள் நடித்த எந்திரன், 2.0 போன்ற படங்கள்தான் என்னை போன்றோருக்கு உந்துதலாக இருந்தது என்று நான் கூறியபோது, இப்போது உங்களைப் போன்றோர்தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள் என்று ரஜினி கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.