ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'அயலான்'. இப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இன்று வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாக வேண்டிய படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. இன்றைய காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த சிக்கலை தீர்த்த பிறகுதான் படம் வெளியாகும் என்கிறார்கள். இன்று வங்கிகளும், நீதிமன்றங்களும் விடுமுறை என்பதால் சிக்கல் தீர வாய்ப்பில்லை. அடுத்த காட்சிகளுக்காவது படம் வெளியாகுமா என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.