ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகின் சக இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான்
மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது.
அனிருத்
அதிர்ச்சியும் சோகமும்… குடும்பத்தாருக்கும், நண்பர்களும் இதயப்பூர்மான இரங்கல்.
தமன்
இது அதிர்ச்சியானது. இளையராஜா சார் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கட்டும். அன்பான பவதாரிணி சீக்கிரமே மறைந்துவிட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
இமான்
பவதாரிணி மேடம் திடீர் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். சீக்கிரமே மறைந்துவிட்டார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்.
சந்தோஷ் நாராயணன்
மிகவும் சோகமான இழப்பு. மிகவும் திறமையும், மென்மையாகவும் பேசக் கூடிய பவதாரிணி மேடம் பல நினைவுகளை நமக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். ராஜா சார் மற்றும் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், அனுதாபங்களும்.
ஜஸ்டின் பிரபாகரன்
செய்தி பற்றி கேள்விப்பட்டதும் ஆழ்ந்த துயரமாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.