இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சென்னை, தரமணியில் இருந்த தமிழக அரசின் பிலிம் சிட்டி தற்போது முழுமையாக செயல்படவில்லை. அங்கு 'டைடல் பார்க்' வந்த பிறகு பிலிம் சிட்டியின் பெரும்பான்மையான இடங்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சில அரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் அதை யாரும் பயன்படுத்துவதும் இல்லை.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவுக்கே முதன்மையான இடமாக இருந்த சென்னையில் தற்போது சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் சென்னை, பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அதிநவீன புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதி 3 மணிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்கவும், அன்று மதியம் 3.30க்கு டெண்டர்களை திறக்கவும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு முந்தைய மீட்டிங் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.