ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் 'சந்தியா ராகம்'. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தாரா தனிப்பட்ட காரணங்களுக்கு விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சந்தியா ஜாகர்லமுடி, அந்தரா ஸ்வர்ணகர், ராஜீவ் பரமேஸ்வர், சுர்ஜித் குமார், அக்ஷயராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரம்மா தேவன், என்.பிரியன் இயக்குகிறார்கள்.